Latest Updates

Categories Post

மீளக் குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்று கொடுக்கும் முகமாக விபரம் திரட்டும் நடவடிக்கை.

மீளக் குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளான மலசல கூடம் மற்றும் குடி நீர்
வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக இது சம்பந்தமான விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகின்றன .

யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு குடி நீர் வசதி மற்றும் மலசல கூடம் இல்லாதவர்களுக்கு இவற்றை சீர் செய்வதற்ககான முன் முயற்சி நடவடிக்கைகளை மேற்க் கொள்ளும் முகமாக தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன .

மீள் குடியேற்ற அமைச்சினால் மேற்க் கொள்ளப்படவுள்ள குறிப்பிட்ட நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட செயலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிராம அலுவலர்கள் மூலம் இத்தகைய தகவல்கள் சேகரிக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது .

யாழ் மாவட்டத்தில் இத்தகைய விபரங்களை பெறுவதில் கிராம அலுவலர்கள் மீள்குடியேற்ற கிராம அமைப்புக்கள் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு இதனை பெறுவதில் ஈடுபட்டுள்ளார்கள் .

0 Response to "மீளக் குடியமர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்று கொடுக்கும் முகமாக விபரம் திரட்டும் நடவடிக்கை."

Post a Comment