Latest Updates

Categories Post

மலேசிய விமான விபத்தில் இருந்து நான் தப்பிவிட்டேன்; நடிகை நமீதா உருக்கமான பேட்டி

நேற்று நடந்த மலேசியா விமான விபத்தில் நடிகை நமீதா இறந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் கசிந்தன. இதனால் நமீதா, நான் அதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இருந்து தப்பிவிட்டேன் என உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழ் மக்களுடன் கொண்டாட வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நான் மலேசியா செல்ல முதலில் திட்டமிட்டேன். ஆனால் எனது அரசியல் பணிகள் என்னை மலேசியா செல்ல அனுமதிக்கவில்லை. என்னை மலேசியா செல்லவிடாமல் தமிழகத்தில் கட்சி பணியாற்ற சொன்ன மச்சானுக்குதான் முதலில் நன்றி சொல்ல  வேண்டும். அவர் அப்படி தடுக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள தமிழ் எப்.எம்-இல் உலக மகளிர் தினத்தன்று சிறப்பு உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தனர் அதற்காக அந்த விமானத்தில் தான் சென்றிருப்பேன். நல்ல வேலையாக நான் செல்லவில்லை விமான விபத்தை நினைத்தாலே எனக்கு இன்னும் கை,கால்கள் எல்லாம் நடுக்கம் எடுக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அவரை தடுத்து நிறுத்திய அந்த மச்சான் பெயரை கேட்டால், போக போக உங்களுக்கு தெரியும் என புன்னகையுடன் தெரிவிக்கின்றார்.

0 Response to "மலேசிய விமான விபத்தில் இருந்து நான் தப்பிவிட்டேன்; நடிகை நமீதா உருக்கமான பேட்டி"

Post a Comment