Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யுத்த இழப்பீடுகள் வழங்கப்படவில்லை புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் கவலை.
யுத்த இழப்பீடுகள் வழங்கப்படவில்லை புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் கவலை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் மீள்குடியேறியதையடுத்து
தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாகியும் தமக்கு யுத்த நஸ்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கவலைதெரிவித்துள்ளனர் .
புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வர்த்தக சங்கக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தனர் . நஸ்டஈடுகள் வழங்கப்படாமையினால் வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது நிலை காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர் .
இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பொறுப்பற்ற தன்மை தொடர்பாகவும் புதுக்குடியிருப்புச்சந்தையின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது .
இக்கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வணிக கைத்தொழில் வேளாண்மை ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி பே . விக்கினேசன் மாகாண சபை உறுப்பினர்களான வி . கனகசுந்தரசுவாமி , திருமதி . மேரிகமலா ஆகியோரும் கலந்துகொண்டிடனர் .
Posted by kesa
on Friday, February 14, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யுத்த இழப்பீடுகள் வழங்கப்படவில்லை புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் கவலை."
Post a Comment