Latest Updates

Categories Post

காதல் தோல்வி! யாழில் மாமர உச்சியில் தூக்கில் தொங்கும் இளைஞன்




யாழ் மானிப்பாய் வீதியில் ஒட்டுமடச்சந்திக்கு அண்டிய பகுதி வீடொன்றில் உள்ள மாமரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அரிச்சந்திரன் விக்னேஸ்வரன் (வயது-23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த இளைஞன் அவரது வீட்டின் முன்புறம் நின்ற மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக உறவினர் ஒருவர் தெரிவிக்கையில்,

அயல் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், விக்னேஸ்வரனின் காதல் விவகாரத்திற்கு வீட்டார் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், இருப்பினும் குறித்த இளைஞன் ஒருவார காலமாக மனம் உடைந்து விரகத்தியான மனோநிலையில் காணப்பட்டதாகவும் அதற்கான காரணம் என்ன என்று தங்களுக்கு புரியாத நிலையில் நேற்றிரவு 11.40 மணியளவில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டான் என்றும் கூறினார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் குற்ற, தடய நிபுணத்துவ பொலிசார் மற்றும் யாழ் நகரப் பொலிசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0 Response to "காதல் தோல்வி! யாழில் மாமர உச்சியில் தூக்கில் தொங்கும் இளைஞன்"

Post a Comment