இந்தியஅரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .
ராஜிவ் கொலை கைதிகள் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் , நளினி , ராபர்ட் பயஸ் , ரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்வதாக சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் . இது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் . இல்லையெனில் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார் .
ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி , தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இரண்டு மறு ஆய்வு மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தனர் . இந்த மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
அதன்படி நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்தது . விசாரணையின் முடிவில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர் .
மேலும் , உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை யாரையும் விடுதலை செய்யக்கூடாது . இவர்களை விடுவிக்க அதிகாரம் இருந்தும் தமிழக அரசு உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை .
எந்த அடிப்படையில் தமிழக அரசு இவர்களை விடுவிக்க முடிவெடுத்தது என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர் . இவர்களை விடுதலை செய்வது குறித்து 2 நாட்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளனர் .
இதனால் , ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலையாவதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது .
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக
0 Response to "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை."
Post a Comment