Categories Post
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு.
யாழ் . போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த ஒரு வார காலமாக
குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
வைத்தியசாலையில் நிலவும் குருதித் தடடுப்பாட்டை நிவர்த்திசெய்யும் பொருட்டு , கொழும்பு மத்திய இரத்த வங்கியிலிருந்து குருதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் . போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எஸ் . நந்தகுமாரன் தெரிவித்தார் .
நடமாடும் குருதி சேகரிப்பு நிலையங்களின் ஊடாக உரியமுறையில் குருதி சேகரிக்கப்படாமையே குருதி தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார் .
சிலவகை குருதி வகைகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கூறினார் .
Posted by kesa
on Wednesday, February 12, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு."
Post a Comment