Latest Updates

Categories Post

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு.



யாழ் . போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடந்த ஒரு வார காலமாக
குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது .

வைத்தியசாலையில் நிலவும் குருதித் தடடுப்பாட்டை நிவர்த்திசெய்யும் பொருட்டு , கொழும்பு மத்திய இரத்த வங்கியிலிருந்து குருதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் . போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எஸ் . நந்தகுமாரன் தெரிவித்தார் .

நடமாடும் குருதி சேகரிப்பு நிலையங்களின் ஊடாக உரியமுறையில் குருதி சேகரிக்கப்படாமையே குருதி தட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார் .

சிலவகை குருதி வகைகளுக்கு அதிக தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கூறினார் .

0 Response to "யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு."

Post a Comment