Latest Updates

Categories Post

மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு. எழுபத்து ஏழாக அதிகரிப்பு. [படங்கள் இணைப்பு]



திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை வரை 77 மனித
எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் இது வரை 77 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . இதே வேளை 5 ரூபாய் நாணயம் போன்ற தடையப்பொருள் ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 28 ஆவது தடவையாக இன்று ( 21-02-2014 ) வெள்ளிக்கிழமை குறித்த மனித புதை குழி தோண்டப்பட்ட போது மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

அனுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் டி . எல் . வைத்தியரெட்ண தலைமையிலான குழுவினர் அகழ்வுப்பணியில் ஈடுபட்டனர் .

இது வரை 69 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைததியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது .

இதே வேளை குறித்த மனித புதைகுழி விரிவு படுத்தப்பட்டு தோண்டப்பட்டுள்ளது .

தோண்டப்பட்ட புதைகுழிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு புதை குழி விரிவு படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

குறித்த புதை குழியின் அகழ்வுப்பணிகள் மீண்டும் நாளை சனிக்கிழமை 29 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது .

0 Response to "மனித புதைகுழியில் இருந்து மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் மீட்பு. எழுபத்து ஏழாக அதிகரிப்பு. [படங்கள் இணைப்பு] "

Post a Comment