கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும்
அதிகரித்துக் காணப்படுவதுடன் சமூகச் சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர் .
கிளிநொச்சி , பரந்தன் , கோரக்கன்கட்டு , பூங்காவனச்சந்தி ஆகிய இடங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துக்காணப்படுவதுடன் சமூகச் சீர்கேடுகளும் சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன .
பரந்தன் பகுதியில் ஏ - 35 வீதியை மையமாகக்கொண்ட பூங்காவனச்சந்தி , கோரக்கன்கட்டு ஆகிய பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கசிப்பு விற்பனை இடம்பெற்று வருகின்றது .
இது நடமாடும் வியாபாரமாகவும் இடம்பெறுவதுடன் குறிப்பிட்ட சில வர்த்தக நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது .
இதனை விட மாலை 6 மணிக்குப் பின்னர் பலரும் வயது வேறுபாடுகளின்றி மதுபோதையில் தள்ளாடித்திரிவதைக் காணமுடிகின்றது . பல்வேறு சமூகச் சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றன . உரிய அதிகாரிகள் இதனைக் கவனத்திலெடுத்து இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Categories Post
Home » Uncategories » சட்டவிரோத மதுபான உற்பத்தியால் சமூகவிரோதச் செயல்கள் அதிகரிப்பு. கிளிநொச்சியில் சமூக ஆர்வலர்கள் கவலை.
சட்டவிரோத மதுபான உற்பத்தியால் சமூகவிரோதச் செயல்கள் அதிகரிப்பு. கிளிநொச்சியில் சமூக ஆர்வலர்கள் கவலை.
Posted by kesa
on Thursday, February 20, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "சட்டவிரோத மதுபான உற்பத்தியால் சமூகவிரோதச் செயல்கள் அதிகரிப்பு. கிளிநொச்சியில் சமூக ஆர்வலர்கள் கவலை."
Post a Comment