Categories Post
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 11 பேருக்கு 1,10,000 ரூபா தண்டம்.
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 11 பேருக்கு 1,10,000 ரூபா தண்டம் விதித்து பருத்தித்துறை
நீதிவான் நீதிமன்ற நீதவான் கே . கஜநிதிபாலன் புதன்கிழமை ( 12 ) உத்தரவிட்டார் .
அத்துடன் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற காலப்பகுதிக்குரிய நட்ட ஈட்டினை மின்சார சபைக்கு வழங்குமாறும் அவர் மேற்படி நபர்களுக்கு உத்தரவிட்டார் .
வல்வெட்டித்துறை பொலிஸாரும் யாழ் . மாவட்டத்தின் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் சேர்ந்து நடத்திய சோதனையின்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கம்பர்மலை , கெருடாவில் , கொம்மாந்துறை , வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 9 பேர் கடந்த 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .
அதேபோன்று உடுப்பிட்டிப்பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கடந்த 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர் .
கைதானவர்கள் புதன்கிழமை ( 12 ) பருத்தித்துறை நீதவான் நீதிதமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினை பிறப்பித்தார் .
யாழ் நிருபர் .
Posted by kesa
on Friday, February 14, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 11 பேருக்கு 1,10,000 ரூபா தண்டம்."
Post a Comment